அழகு நிலையத்துக்கு போய் ஒப்பனை செய்ய அதிக செவாகும். அவ்வளவு பணம் இல்லையே என வருத்தப்படுபவர்களில் எத்தனை பேருக்கு வீட்டு அடுப்படியில் அழகுக்கான அத்தனை பொருட்களும் குவிந்து கிடக்கும் ரகசியம் தெரியுமா?. அவை என்னவென்று பார்க்கலாம்.
• வெள்ளரிச்சாறு- பன்னீர் சமஅளவு எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வாருங்கள். முகம் ஜொலிக்கும். தேன்- எலுமிச்சைச் சாறு கலவையையும் முகத்தில் தேய்த்து வரலாம்.
• மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, காய்க்காத பால் கலவையை நன்றாக கலந்து அதை முகத்தில் அழுந்த தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால் முகம் பிரகாசிக்கும். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வரலாம்.
• மோரில், சிறிது ஓட்ஸ் கலந்து முகத்தில் கெட்டியாக தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால்.. அழுக்குகள் நீங்கி பளிச்சென்று தோன்றும்.
• தேங்காய்த் தண்ணீரில் முகம் கழுவுங்கள். முகம் மென்மையாகும்.
• அதிக வெயிலால் முகம் கறுத்துவிட்டதா? பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், தேன் கலவையைப் பூசி 15 நிமிடம் ஊற வைத்த பின்னர் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை படிப்படியாக நீங்கும்.
• எலுமிச்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி குளித்து வந்தால் பளபளப்பு கிடைக்கும்.
• முழங்கை- கால் மூட்டுகளில் கருமை தென்படுகிறதா? எலுமிச்சை சாறு- கடலை மாவு கலவையைப் பூசி கழுவி வாருங்கள், கண்கூடாக பலன்கள் தெரியும்.
• வெள்ளரிச்சாறு- பன்னீர் சமஅளவு எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வாருங்கள். முகம் ஜொலிக்கும். தேன்- எலுமிச்சைச் சாறு கலவையையும் முகத்தில் தேய்த்து வரலாம்.
• மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, காய்க்காத பால் கலவையை நன்றாக கலந்து அதை முகத்தில் அழுந்த தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால் முகம் பிரகாசிக்கும். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வரலாம்.
• மோரில், சிறிது ஓட்ஸ் கலந்து முகத்தில் கெட்டியாக தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால்.. அழுக்குகள் நீங்கி பளிச்சென்று தோன்றும்.
• தேங்காய்த் தண்ணீரில் முகம் கழுவுங்கள். முகம் மென்மையாகும்.
• அதிக வெயிலால் முகம் கறுத்துவிட்டதா? பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், தேன் கலவையைப் பூசி 15 நிமிடம் ஊற வைத்த பின்னர் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை படிப்படியாக நீங்கும்.
• எலுமிச்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி குளித்து வந்தால் பளபளப்பு கிடைக்கும்.
• முழங்கை- கால் மூட்டுகளில் கருமை தென்படுகிறதா? எலுமிச்சை சாறு- கடலை மாவு கலவையைப் பூசி கழுவி வாருங்கள், கண்கூடாக பலன்கள் தெரியும்.
No comments:
Post a Comment