கோடை என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், வழியும் வியர்வைதான் நினைவுக்கு வரும். அதனால் சவுகரியமாக இருக்கமுடியாது. விதவிதமாக ஆடைகள் அணியமுடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. கோடை காலத்திலும் அழகழகாக ஜொலிக்கும் உடைகளை அணிந்து ஆனந்தமாக வாழலாம்.
பென்சில் ஸ்கர்ட்: இந்த பேஷன் உடைகள் இடையை ‘கொடி இடையாகக்’ காட்டும். உடையில் முக்கியத்துவம் கொடுக்கவிரும்பும் பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுத்துக் கொள்ளலாம். கையிலோ, இடுப்பிலோ பெரும்பாலானவர்கள் ‘ஸ்லிட்’ கட் கொடுப்பது இப்போது பேஷனாக இருக்கிறது. உடலில் எந்த பகுதி பார்க்க அழகாக இருக்கிறதோ, அந்த பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுப்பது நல்லது.
பெப்லம்ஸ்: உடலில் பெண்மைத்தன்மையை அதிகரித்துக்காட்ட விரும்புகிற வர்கள் இந்த வகை பேஷனை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். இதற்கு கேடியா பிளவுஸ் அணிந்தால் இடுப்புப் பகுதி வளைவு நெளிவுகளை சிறப்பாக்கிக்காட்டும். இதற்கு ஜோடியாக பென்சில் ஸ்கர்ட் அல்லது பிளாசோஸ் வகை பேண்ட் அணியலாம்.
சிம்பிள் ஸ்கர்ட்: கோடைகாலத்தில் விருந்து, விழாக்கள் அதிகம் நடக்கும். அதில் கலந்துகொள்ளும் பெண்கள் இந்த வகை ஆடைகளை அணியலாம். கோடைகாலத்தில் கல்யாண விருந்துகளில் நடனமாட இந்த ஆடை காற்றோட்டமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இந்த வகை ஆடைகளை இளம் பெண்கள் இப்போது அதிக அளவில் வடிவமைத்துக் கேட்கிறார்கள். ‘நியான் கலர்ஸ்’ பெண்களை அதிகம் கவர்கிறது.
சிக்னல் விளக்கு நிறங்களான சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய அடர் நிறங்களைத்தான் நியான் கலர்ஸ் என்று கூறுகிறோம். இந்த மூன்று வகை நிறங்களில்தான் கைப்பைகள், காலணிகள், வளையல்கள் அதிகம் உருவாகிறது. பெண்களை ஈர்க்கும் இந்த நிறங்களில் தயாராகும் கோடை ஆடைகள் பெண்களை அதிகம் கவர்கிறது.
கீழ் உடை, மேல் உடை என்று தனித்தனியாக இல்லாமல் கவுன்போல் ஒரே உடையாக உருவாக்கப்படும் ஜம் சூட்ஸ், கோடையில் அதிகமான பெண்களால் விரும்பப்படுகிறது. காற்றோட்டமான இந்த ஆடையை பழைய காலத்தில் கம்பெனி பணியாளர்கள் அணிந்தார்கள். இப்போது அது பெண்கள் விரும்பும் பேஷனாகி இருக்கிறது.
அனிமல் பிரிண்ட்ஸ், ஜங்கிள் பிரிண்ட்ஸ், பூ டிசைன் உடைகளும் கோடையில் புகழ்பெறுகிறது. கோடை காலத்தில் மிருகங்களை பார்க்கச் செல்வது, காட்டுப்பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது, பூந்தோட்டங்களை கண்டு ரசிப்பது போன்றவைகளில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த ஆர்வத்தை பயன்படுத்தி அதையே கோடைகால டிசைன்களாக்கி இருக்கிறார்கள். வேட்டி போல் அணியக்கூடிய டோத்தி சல்வார் கோடையில் பெருமளவு பெண்களால் விரும்பப்படுகிறது.
இப்போது இந்தியா முழுவதும் அதிக செல்வாக்கு பெற்றிருப்பது, ‘ட்ரைபல் அசென்ஸ்’ என்ற ஆதிவாசிகள் பேஷன் உடை. ஆதிவாசிகள் தங்கள் பகுதியில் கிடைக்கும் மணிகள், மாலைகள், கண்ணாடிகள், வளையல்களை பயன்படுத்தி இந்த அழ கான உடையை தயாரிப்பார்கள்.
கோடை கால ஆடைகள் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு டிப்ஸ்...........
காட்டன், ஷிபான், ஜார்ஜெட், லேசஸ் போன்ற துணி வகைகளில் உருவாக்கப்படும் ஆடைகளை வாங்கி அணியுங்கள். அவை அதிக எடை இல்லாமல் காற்றோட்டமாக இருக்கும். முன்பு இள நிறத்திலான கோடை கால உடைகளையே பெண்கள் விரும்பினார்கள்.
இப்போது நியான் கலர்ஸ் உடைகளும் கோடைகால பேஷனாக மாறிவிட்டது. பெர்பியூம் அளவை குறைத்து அதற்கு பதிலாக டியோடரன்ட்டை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது சன் கிளாஸ் அணிந்துகொள்ள வேண்டும்.
காலணிகள் திறந்த நிலையில் இருந்தால் காற்றோட்டம் கிடைக்கும். காலணிகள் மணிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தால் பார்க்க அழகுதரும். கோடையில் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
பென்சில் ஸ்கர்ட்: இந்த பேஷன் உடைகள் இடையை ‘கொடி இடையாகக்’ காட்டும். உடையில் முக்கியத்துவம் கொடுக்கவிரும்பும் பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுத்துக் கொள்ளலாம். கையிலோ, இடுப்பிலோ பெரும்பாலானவர்கள் ‘ஸ்லிட்’ கட் கொடுப்பது இப்போது பேஷனாக இருக்கிறது. உடலில் எந்த பகுதி பார்க்க அழகாக இருக்கிறதோ, அந்த பகுதியில் ‘ஸ்லிட்’ கொடுப்பது நல்லது.
பெப்லம்ஸ்: உடலில் பெண்மைத்தன்மையை அதிகரித்துக்காட்ட விரும்புகிற வர்கள் இந்த வகை பேஷனை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். இதற்கு கேடியா பிளவுஸ் அணிந்தால் இடுப்புப் பகுதி வளைவு நெளிவுகளை சிறப்பாக்கிக்காட்டும். இதற்கு ஜோடியாக பென்சில் ஸ்கர்ட் அல்லது பிளாசோஸ் வகை பேண்ட் அணியலாம்.
சிம்பிள் ஸ்கர்ட்: கோடைகாலத்தில் விருந்து, விழாக்கள் அதிகம் நடக்கும். அதில் கலந்துகொள்ளும் பெண்கள் இந்த வகை ஆடைகளை அணியலாம். கோடைகாலத்தில் கல்யாண விருந்துகளில் நடனமாட இந்த ஆடை காற்றோட்டமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இந்த வகை ஆடைகளை இளம் பெண்கள் இப்போது அதிக அளவில் வடிவமைத்துக் கேட்கிறார்கள். ‘நியான் கலர்ஸ்’ பெண்களை அதிகம் கவர்கிறது.
சிக்னல் விளக்கு நிறங்களான சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய அடர் நிறங்களைத்தான் நியான் கலர்ஸ் என்று கூறுகிறோம். இந்த மூன்று வகை நிறங்களில்தான் கைப்பைகள், காலணிகள், வளையல்கள் அதிகம் உருவாகிறது. பெண்களை ஈர்க்கும் இந்த நிறங்களில் தயாராகும் கோடை ஆடைகள் பெண்களை அதிகம் கவர்கிறது.
கீழ் உடை, மேல் உடை என்று தனித்தனியாக இல்லாமல் கவுன்போல் ஒரே உடையாக உருவாக்கப்படும் ஜம் சூட்ஸ், கோடையில் அதிகமான பெண்களால் விரும்பப்படுகிறது. காற்றோட்டமான இந்த ஆடையை பழைய காலத்தில் கம்பெனி பணியாளர்கள் அணிந்தார்கள். இப்போது அது பெண்கள் விரும்பும் பேஷனாகி இருக்கிறது.
அனிமல் பிரிண்ட்ஸ், ஜங்கிள் பிரிண்ட்ஸ், பூ டிசைன் உடைகளும் கோடையில் புகழ்பெறுகிறது. கோடை காலத்தில் மிருகங்களை பார்க்கச் செல்வது, காட்டுப்பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது, பூந்தோட்டங்களை கண்டு ரசிப்பது போன்றவைகளில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த ஆர்வத்தை பயன்படுத்தி அதையே கோடைகால டிசைன்களாக்கி இருக்கிறார்கள். வேட்டி போல் அணியக்கூடிய டோத்தி சல்வார் கோடையில் பெருமளவு பெண்களால் விரும்பப்படுகிறது.
இப்போது இந்தியா முழுவதும் அதிக செல்வாக்கு பெற்றிருப்பது, ‘ட்ரைபல் அசென்ஸ்’ என்ற ஆதிவாசிகள் பேஷன் உடை. ஆதிவாசிகள் தங்கள் பகுதியில் கிடைக்கும் மணிகள், மாலைகள், கண்ணாடிகள், வளையல்களை பயன்படுத்தி இந்த அழ கான உடையை தயாரிப்பார்கள்.
கோடை கால ஆடைகள் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு டிப்ஸ்...........
காட்டன், ஷிபான், ஜார்ஜெட், லேசஸ் போன்ற துணி வகைகளில் உருவாக்கப்படும் ஆடைகளை வாங்கி அணியுங்கள். அவை அதிக எடை இல்லாமல் காற்றோட்டமாக இருக்கும். முன்பு இள நிறத்திலான கோடை கால உடைகளையே பெண்கள் விரும்பினார்கள்.
இப்போது நியான் கலர்ஸ் உடைகளும் கோடைகால பேஷனாக மாறிவிட்டது. பெர்பியூம் அளவை குறைத்து அதற்கு பதிலாக டியோடரன்ட்டை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது சன் கிளாஸ் அணிந்துகொள்ள வேண்டும்.
காலணிகள் திறந்த நிலையில் இருந்தால் காற்றோட்டம் கிடைக்கும். காலணிகள் மணிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தால் பார்க்க அழகுதரும். கோடையில் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
No comments:
Post a Comment